
130 கிலோமீட்டர் தூரத்துக்கு மின்சார பயணிகள் விமானம் வெற்றிகரமாக பறந்து சாதனை படைத்த நிகழ்வு அமெரிக்காவில் நடந்துள்ளது. இந்த விமானம் பறக்க 130 கிலோமீட்டருக்கு ரூ.700 மட்டுமே செலவாகும் எனத் தெரியவந்துள்ளது.
உலகிலேயே முதன்முதலாக முழுக்க முழுக்க மின்சாரத்தால் (பேட்டரி) இயங்கக்கூடிய பயணிகள் விமானத்தை அமெரிக்காவைச் சேர்ந்த பீட்டா டெக்னாலஜீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆலியா சிஎக்ஸ் 300 என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த விமானம் அண்மையில் அமெரிக்காவின் ஈஸ்ட் ஹாம்ப்டன் பகுதியிலிருந்து நியூயார்க்கிலுள்ள ஜான் எப். கென்னடி(ஜேஎப்கே) விமான நிலையத்துக்கு வெற்றிகரமாக இயக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments